Saturday, November 8, 2008

ஒரு பதிவின் மரணம்.....

.நீண்ட நாளாக இந்த பதிவை முறையாக முடிக்க வேண்டும் என்ற எண்ணம்.....என் கடந்த பதிவிற்கு பிறகு பல முறை எப்பொழுதோ அகராதியில் ஒளித்து வைத்த மயிலிறகை தடவி பார்ப்பது போல் வந்து போயிருக்கிறேன்...இதோ இன்று அந்த மயிலிறகை என் நினைவுத்தோட்டத்தில் புதைக்கிறேன்.....பதிவெழுத கதையோ...காரணமோ...கருத்தோ இருந்தால் மட்டும் போதாது .....நெறியும் வேண்டும் என்று தெரிந்த விஷயம் தெளிவானது....கோடுகள் வரைய நினைத்து புள்ளிகளுடன் நின்று போன என் பல முயற்சிகளில் இதோ இன்று இந்த இரு பரிமாண இணைய உறவும்.... .....எழுதிய நாட்களில் வந்து வாழ்த்திய நண்பர்க்கு நன்றி....இதோ பாதி எழுதிய ஒரு பதிவு.......

"ஸ்கோர் என்னங்க? "

நம்மை பார்க்காமலே tv மேல் வைத்த கண் மாறாமல் ஒரு எரிச்சலோட... "133 இக்கு 4 விக்கெட்...." குதிகாலில் நின்று எம்பி பார்க்க முயன்றுகொண்டிருந்த வெள்ளை சட்டை நபர்...

மனிதரின் எரிச்சலுக்கு காரணம் புரிந்ததும்...மெதுவா அகரம் சக்லைனிடம் ஏதோ பேசிக்கொண்டிருக்கும்போது......மெதுவா...ஒரு பெருமூச்சுடன் ( இந்த பெருமூச்சு தான் நானும் ஒரு விசிறி என்று நம்மை நண்பரின் நிலைக்கு கொண்டு வந்து நிறுத்தி ஒரு பரஸ்பரத்தை உருவாக்கியதுன்னு இப்போ புரியுது) ....யார் ஆடறாங்க.....

அசாரும் ஆம்றேயுங்க.....அந்த 'ங்க' உண்டான பரஸ்பரத்தை உறுதிப்படுத்தும்....

நம்ம சைலண்டாயி மேட்சை கவனிக்க....அடுத்த விளம்பர இடைவேளையில்......"நல்லாதாங்க ஆடிகிட்டு இருந்தாங்க, சித்துவும் சச்சினும், திடீர்ன்னு அடிக்க பார்த்து சித்து பவுண்டரி கிட்ட கேட்ச் குடுத்து அவுட், அடுத்த ஓவர்லையே சச்சின் எட்ஜ் வாங்கி அவுட்டுங்க....ச்சே"

நம்மளும் வழக்கமான "அது எப்பயுமா சனியன் அப்படிதான்....ரெண்டுல ஒருத்தர் அவுட் ஆயிட்டா...அடுத்த ஆளும் அவுட்டு ஆயிருவாங்க....பிப்டி கிப்டி போட்டாங்களா"

ரெண்டு பெரும் TV யையே பார்த்துகொண்டு இருக்கிறோம்....வழக்கமான ரெண்டு விளம்பரத்தை தாண்டி....தாடி வைத்த மந்திரவாதி "சப்னா" என்று கத்திக்கொண்டு பிளாஸ்டிக் பாயில் பறந்து கொண்டிருக்கிறார்...

"ட்ரிங்க்ஸ் போல" நண்பரிடமிருந்து......அப்போது தான் கோமாவில் இருந்து விழித்த நோயாளி போல....ஒரு வித "இவ்ளோ நேரம் கேக்காததுக்கு மன்னிச்சிருங்க" தொனியில், "எவ்ளோ ஓவருங்க ஆச்சு"...

"32 ஓவருங்க, அவுனுங்க கடைசி ஆள் வரைக்கும் காட்டனுங்க, ஒரு 250 போட்டாதான் சமாளிக்க முடியும்" நண்பர்...

மந்திரவாதி ரெண்டு முறை வந்து போய்விட்டார்...ஆட்டம் துவங்கியபாடில்லை....சின்ன பையன் ஒருத்தன் கும்பகர்ண சைஸ் பூரிக்கும் சமொசவுக்கும் இடையில் பல்டி அடித்துகொண்டிருந்தான்.....

"எங்கேங்க.....போன தடவை 265 போட்டும்....48 ஓவர்லையே அடிச்சிட்டாங்களே" .....எதிரணியை "ங்க" போடுவது யார் என்று நானும் வெள்ளை சட்டையும் பார்க்க...முழுக்கை சட்டையை இன் செய்து சூ போட்டிருந்த இன்னொரு பார்வையாளர்......

எங்கே நாங்கள் இவன் சரியான கருநாக்கு ஆளா இருப்பான் போலன்னு நினைத்துவிடுவோமா என்று....." இன்னிக்கு அந்த பன்னேர்ஜீயோ, சட்டேர்ஜீயோ...அவன தூக்கிட்டு...ஸ்ரீநாத்தை கொண்டு வந்திருக்காங்க.......பையன் நல்லா வெஸ்ட் இண்டீஸ் போவ்லேர் மாதிரி போடறான்...." டாபிக்கை மாத்தினார்.....

90 களின் ஆரம்பத்தில் நாங்கள் காந்திபுரத்தில் குடியிருந்தோம்.....அறியாதவர்க்கு காந்திபுரம் கோவையின் பிரபல ஷாப்பிங் ஏரியாக்களில் ஒன்று.....கிராஸ் கட் ரோடு அதன் பிரதான வீதி.......

கிரிக்கெட் மேட்ச் நடக்கும் நாட்களில்....."

1 comment:

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in