Wednesday, September 24, 2008

லஞ்சம் வாங்கலையோ லஞ்சம் ..

  • அல்பேனியா - பல நூறு வருட அந்நிய ஆட்சி, கம்யூனிசம் என்ற பெயரால் இரும்புக்கரங்களால் நெருக்கப்பட்டு, கடந்த இருபது வருடங்களாக பொருளாதாரச்சீரழிவு, சமுதாயக்கிளர்ச்சி, போர், அகதிகள்
  • மடகஸ்கார் - வருமை, அரசியல் நிலையின்மை, ரெண்டே கோடி மக்கள், குட்டித்தீவு நாடு
  • செர்பியா மற்றும் மொண்டேநேக்ரோ - முதல், இரண்டாம் உலகப்போர்களால் சீரழிந்த நாடுகள் , யுகோஸ்லோவியா தீபகற்பம் உடைந்தபோது உருவான சிறிய நாடுகள் , 2006 இல் இரண்டாக பிரிந்த நாடுகள். போர், இனத்தகராறு என்று இன்னும் போராடும் நாடுகள்
  • பனாமா - 33 லட்சம் பேர் வாழும் சிறிய மத்திய அமேரிக்க நாடு. மூன்று முறை மூன்று வேவீறு நாடுகளிடம் இருந்து விடுதலை பெற்ற நாடு. சொந்தமாக நாணயங்களும் அமேரிக்க டாலர் நோட்டுகள் புழங்கும் நாடு.
  • செனெகல் - போர், உள்நாட்டு சண்டை, பிரிவினைவாதிகள், வறுமை நிலவும் ஆபிரிக்க நாடு
இந்த நாடுகளை நினைத்து நான் பெருமிதம் கொள்கிறேன்...இத்தனை பிரச்சனை இருந்தும் இவை உலகநாடுகளில் லஞ்சம் புழங்கும் (கணிப்பு) வரிசையில் 85 ஆவது மோசமான இடத்தில் உள்ளன.

அட மறந்துட்டேன், இதே இடத்தில் இவற்றோடு நம்ம இந்தியாவும். போன வருஷத்தை ஒப்பிட்டு பார்த்தா ஒரு 13 இடம் கீழே ( மோசம்) .அதுல தமிழகம் முன்னேறிய மாநிலங்களிலேயே மோசமான நிலை.

இதுல கொடுமை என்னன்னா...புதுசா ஒன்னும் இல்லை....அதிகமாக இந்தியாவில் லஞ்சம் கொடுக்கவேண்டிய இடங்கள்.....

  1. ரேஷன் கடை - கார்டு வாங்க, பொருள் வாங்க, அட்ரஸ் மாற்ற (ச்சே), உறுப்பினர்கள் சேர்க்க
  2. ஹாஸ்பிடல் - பெட், ஆராய்ச்சி, மருந்து, ஆபரேஷன், சர்டிபிகேட், ரத்தம்
  3. பள்ளிக்கல்வி - அட்மிசன், சர்டிபிகேட், பதிவு, ஸ்காலர்சிப், ஹாஸ்டேல் இடம்
  4. மின்சாரம், தண்ணீர் - புது இணைப்பு, மீட்டர் ரிப்பேர், பில், மீட்டர் இணைப்பு, விவசாய இணைப்பு, பில் குறைக்க
இன்னும் சொல்ல என்ன இருக்கு....என்ன பண்றதுன்னு தெரியலை - கோவமா, ஏக்கமா, எதிர்பார்ப்பா, கவலையா, பயமா.....வளரும் பாரதம் எல்லாம் இருக்க எங்கயோ ஒரு மூலைல இந்த செய்திய பார்க்கும்போது கொஞ்சம் வலிக்குது.....கடமைய செய்ய லஞ்சம்.....நானும் ஒரு குற்றவாளி..

2 comments:

Mahesh said...

என்னங்க.... ரொம்ப கடுப்புல இருக்கீங்க போல.... லூஸ்ல விடுங்க.... போகப் போக சரியாயிரும்னு நெனச்சா... நெலம இன்னும் மோசமாத்தான் போயிட்டிருக்கு....

அணிலன் said...

வாங்க மகேசன்னே ....கொஞ்சம் கடுப்புதாங்க...அதுவும் வாய் கிழிய பேசனப்புறம்....பாருடா உங்க ஊரு அழகைன்னு சொன்னமாதிரி ஒரு உணர்ச்சி...